• IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துச்செய்தி

    இந்திய விடுதலைப்போராட்டத்தில் எத்தனையோ ஒப்பற்ற மனிதர்கள் பங்கேற்றாலும் ‘தேசத்தந்தை’ என்று எல்லோராலும் ஒருமனதாக அன்புடன் அழைக்கப்பட்டவர் ‘மகாத்மா காந்தியடிகள்’

    ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு - உப்பு சத்தியாகிரகம் - வரி கொடா இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம் - வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்திய வெள்ளையர்களையே திகைக்கச்செய்து, சுதந்திர இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர்.

    அறவழியில் போராடிய அவரின் பெருமையை போற்றும் வகையில் அவர் பிறந்த தினமான அக்டோபர் 2-ஆம் நாளினை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் “அனைத்துலக வன்முறையற்ற நாள்” என அறிவித்தது. இந்நன்நாளில் அவர்தம் பெருமையைப் போற்றுவதோடு, அவர்காட்டிய வழியைப் பின்பற்றி, உலக அரங்கில் நம் இந்திய தேசத்தை வல்லரசு நாடாகவும் – மற்ற தேசங்களுக்கு நாம் ஒரு முன்னோடியாக திகழவும் உறுதியேற்போம் எனக்கூறி, காந்திய வழியை பின்பற்றும் அனைத்து மக்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது காந்திஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.