• குமரிஅனந்தன் அவர்களின் நடைபயண கோரிக்கை வெற்றி பெறட்டும் - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றியவருமான 'இலக்கியச்செல்வர்' திரு. குமரி அனந்தன் அவர்கள், தமிழகத்தில் "மதுவில்லா சமூகம்" உருவாகிட பூரண மதுவிலக்கை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்தாண்டு டிசம்பர் 25-ம் தேதி முதல் சென்னையிலிருந்து குமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயண பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

    தன்னுடைய 83 வது வயதிலும் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாக ஏறக்குறைய 800 கி.மீ தொலைவுக்கு, மக்கள் நலனுக்காக மதுவை ஒழிக்க போராடிவரும் திரு. குமரி அனந்தன் அவர்களின் சேவை போற்றத்தகுந்த ஒன்றாகும். அவரின் கோரிக்கையினை ஏற்று, தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.