• 10- வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    2015-16ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ம் வகுப்பு தேர்வினை விடாமுயற்சியோடும், தொடர்பயிற்ச்சியோடும் - தளர்வில்லாத தன்னம்பிக்கையுடனும் எழுதி வெற்றி பெற்றுள்ள இருபால் மாணவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    மேலும் அனைத்து வசதிகளையும் - பயற்சிகளையும் உள்ளடக்கிய தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக – அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோன்று பெருமளவு வெள்ளம் பாதித்த சென்னை – திருவள்ளூர் – காஞ்சிபுரம் – விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் அதிகளவில் தேர்ச்சி வெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது.

    இன்றைய மாணவர்கள் – நாளைய தலைவர்கள் என்பதனை நன்கு உணர்ந்து வீட்டிற்கும் – நாட்டிற்கும் பயன்படும் விதத்தில் மாணவர்கள் தங்களை அனைத்து துறைகளிலும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மாணவ சமுதாயம் படிக்கின்ற காலத்தில் அனைத்தையும் ஆழமாக உள்வாங்கி, அதனை பகுத்தறிவு கொண்டு வெளிப்படுத்த வேண்டும் என மாணவ சமுதாயத்தினரை கேட்டுக்கொள்கின்றேன்.