• “அதர்மம் அழிந்து – தர்மம் தழைத்தோங்கட்டும்” - டாக்டர் பாரிவேந்தர் ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

    ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத கல்வி – செல்வம் – வீரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி – லட்சுமி – பார்வதி எனும் முப்பெரும் தேவியர்களை,தூய்மையான உள்ளத்துடனும் – பக்தியுடனும் போற்றி வழிபடும் விழா நவராத்தியாகவும் தசராவாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

    மனிதவள மேம்பாட்டிற்கும் – சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கல்விஅந்த கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை போற்றியும்,நாம் செய்யும் தொழில்கள் நம்மை வாழவைக்கும் என்பதற்காக செல்வத்தின் அதிபதியான லட்சுமியை போற்றியும்கெட்டவற்றை நல்லவை வெற்றி கொள்ளும் எனும் தத்துவத்தினை விளக்கும் வீரத்தின் அதிபதியான பார்வதியை போற்றியும்இத்திருவிழாக்கள் நாடு முழுவதும் நவராத்திரியாகவும் – தசராவாகவும் கொண்டாடப்படுகின்றன.

     இந்நாளில்அதர்மம் எனும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்துதர்மம் தழைத்தோங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறிநாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சரஸ்வதிஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.