• தீமைகள் அகன்று நன்மைகள் பெருகட்டும் - டாக்டர் பாரிவேந்தர் தீபாவளி வாழ்த்து –

    இந்தியாவில் அனைத்து மக்களும் ஒருசேர இணைந்து ஒரே நாளில் மகிழ்வுடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளியாகும்.

     

     பண்டிகைகளின் நோக்கம், குடும்பத்தில் மகிழ்ச்சியும் –சமுதாயத்தில் சமத்துவமும் - சகோதரத்துவமும் நீடித்து, மக்களிடம் வறுமையும், வன்முறையும் நீங்கி – ஒற்றுமை செழித்து அனைவரின் வாழ்விலும் வளர்ச்சி தழைத்தோங்க வேண்டும் என்பதுதான்.

     

     தீமைகள் அகன்று – நன்மைகள் பெருகுவதன் அறிகுறியாக விளக்கேற்றி வைக்கும் ஒளித்திருநாளான இத்தீபாவளி பண்டிகையில்,பட்டாசு ஒலியிலும் – மத்தாப்பின் ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து –மகிழ்ச்சி வெள்ளம் பெருக வேண்டுமெனக் கூறி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.