• அரசியல் சட்டத்தின் மூலம் பெண்களுக்கான சமஉரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - மகளிர் தினம் குறித்து டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து –

    100 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திடாத காலத்தில் அடுக்களை முதல் பொதுவெளி வரை பெண்கள் பட்ட துயரங்கள் எண்ணற்றவையாகும். இன்று நவீன சாதனங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதியான சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் மனரீதியாகவும் – உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். இதிலிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு.

    அரசு பதவிகளிலும் – அரசு வேலை வாய்ப்புகளிலும் பெண்களுக்கான சம உரிமைகள் – சம வாய்ப்புகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும், அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதும் இந்திய ஜனநாயக கட்சியின் கொள்கைகளாகும்.

    மேலும், சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களிலும் கல்வி, வேலைவாய்ப்புகளிலும் பெண்களின் உரிமைகள், வாய்ப்புகள் பாதுகாக்கப்பட அரசியல் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் எனக்கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.