• IJK சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

    பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்திலுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்கள் தலைமையில்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் திரு.எம்.எஸ்.ராஜேந்திரன் – தென்சென்னை மாவட்டத் தலைவர் திரு. நெல்லை வி.சண்முகம் – மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் திரு. தங்கவேலு – மகளிரணி செயலாளர்கள் திருமதி சத்தியவதி, திருமதி லதா, திருமதி உஷா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.