• நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்ள கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அழைப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,  நாளை (22.06.2022) காலை 11.00 மணிக்கு, கட்சியின் தலைவர்  டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும்.

    பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய – மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும்.

    சுரண்டல் லாட்டரியை தடை செய்ய வேண்டும்,  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் திரு.எம்.ரவிபாபு, செய்தி தொடர்பாளர் திரு.பிரவீன் காந்த், சென்னை மண்டல மகளிரணி தலைவி திருமதி A.B.லதா மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    எனவே, சென்னை – காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் – பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இங்ஙனம்,

    கட்சித் தலைமையகம்

    இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)