நேற்று அய்யா பாரிவேந்தர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டேன். மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு, கட்சியின் வளர்ச்சி குறித்த முக்கியமான தீர்மானங்களை எடுத்தோம். கட்சியின் அமைப்பு வலுப்பெற, நிர்வாக மாற்றங்கள், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பொதுமக்களுக்கு பயன்படும் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அனைவரின் ஒற்றுமையும், செயல் திட்டங்களும், கட்சியை மேலும் உயர்த்தும். மக்கள் நலத்திற்காக, மாண்பமை பாரிவேந்தர் அவர்கள் வழிகாட்டுதலில் முன்னேறி, இந்திய ஜனநாயகக் கட்சியை மேலும் வலுப்படுத்துவோம்!