Loading...

செய்திகள்

May 30, 2023
News Image

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரியும்-பெருகிவரும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கக்கோரியும்31.05.2023 சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK-நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன் அவர்கள் அழைப்பு

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,  31.05.2023 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, கட்சியின் தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையிலும், பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.ஜெயசீலன் அவர்களின் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழறிஞர் உயர்திரு.தமிழருவி மணியன் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.  இதில்,

Ø  பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்;

Ø  மது விலை உயர்வினால் பெருகி வரும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்;

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சொந்தங்கள் பெருமளவில் கலந்துகொண்டு, தமிழக அரசின் கவனத்தை முழுவதுமாக ஈர்க்கப்போகும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தினை முழுவீச்சில் வெற்றிபெறவைக்க  ஒத்துழைக்கும்படி உங்களை அன்போடு அழைக்கின்றேன். மேலும், இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் செய்திகளை சேகரிக்க தங்களுடைய பத்திரிக்கை மற்றும் ஊடக நிருபர்களை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

 

அன்புடன்,

பி.ஜெயசீலன்

பொதுச்செயலாளர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

 

 

Back to News