கடந்த 9 ஆண்டுகளாக அரசு மற்றும் விஞ்ஞானிகள் எடுத்த முயற்சிக்கு இன்று மாபெரும் வெற்றியாக இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலாவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதிலும் சிறப்பம்சமாக நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை நம் நாடு பெற்றிருப்பது இந்திய குடிமகனாக நம் ஒவ்வொருவருக்கும் பெருமையளிக்கின்றது.
வரலாற்று சிறப்புமிக்க இத்தருணத்தை நமக்களித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies