Loading...

செய்திகள்

Mar 29, 2025
News Image

“உங்களின் புதிய தொடக்கம் – புதிய கனவுகள்- புதிய இலக்குகள் அனைத்தும் நிறைவேறி ஓர் இனிய வாழ்வைத் தரட்டும்” ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் ‘யுகாதி’ திருநாள் வாழ்த்துச்செய்தி

திராவிட மொழிகள் குடும்பத்தின் மூத்த, முதன்மை மொழியான தமிழ் மொழியோடு, மிக நெருங்கிய தொடர்புடைய தெலுங்கு, கன்னட மொழிகள் பேசும் மக்கள், தங்களின் புத்தாண்டு நாளாக யுகாதித் திருநாளை கொண்டாடி மகிழ்கின்றனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், சகோதர- சகோதரிகளாய் அவர்தம் இன்ப - துன்பங்களில் பங்கேற்று, தொழில் – வணிகம் – கல்வி - கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியுடன், தெலுங்கு இன மக்களின் முக்கிய பண்டிகையான யுகாதித் திருநாளில் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த புதிய தொடக்கத்தில் அனைவரின் வாழ்விலும் நன்மைகள் எய்தி, அமைதி – மகிழ்ச்சி மற்றும் சிறப்பான வளர்ச்சி கிடைக்க வேண்டும். எனக்கூறி, யுகாதித் திருநாளைக் கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட சகோதர - சகோதரிகளுக்கு இனிய ‘யுகாதித் திருநாள்’ நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ,  வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News