1950-ம் ஆண்டில் குடியரசு நாடாகி, 75 ஆண்டுகளைக் கடந்து - 76 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். இந்தியா என்றாலே, ஏழை நாடு என்று நம்மை ஏளனமாக பார்த்த நிலை மாறி, இன்று நம்மையும் உலகில் வளர்ந்த நாடுகளின் வரிசையில் பார்க்க துவங்கியுள்ளன. இதற்கு காரணம் நம்நாட்டின் பொருளாதாரம் – விஞ்ஞானம் - தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியேயாகும். உலகின் மற்ற நாடுகளுக்கு மத்தியில், மக்களாட்சி நடக்கிற பெரிய நாடு என்கிற பெருமிதத்தை நமக்கு தந்திருப்பது நமது ஜனநாயகம்தான் தம் வாழ்நாட்களின் பெரும்பகுதியை நாட்டிற்காக அர்ப்பணித்து, இத்தகைய மகத்தான அரசியலமைப்பை உருவாக்கித் தந்த நம் மகத்தான தலைவர்களையும் – சட்டம் இயற்றிய மேதைகளையும் இத்தருணத்தில், நன்றியுடன் நினைவுகூர நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். இந்திய குடிமக்களாகிய நாம், ஜனநாயகத்தைக் கொண்டு தேசத்தை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளில் ஈடுபடுவதோடு, வலிமை – அமைதி - பொருளாதார வளம் - சமூக முன்னேற்றம் மற்றும் கலாச்சார துடிப்புமிக்க இந்தியாவை உருவாக்கவும், நமது பாரத நாடு வலிமையும், பொலிவும் பெற்று வல்லரசாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமகனும் தனது பங்களிப்பை அளிக்க உறுதியேற்போம் எனக்கூறி, உலகெங்கும் பரவி வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் எனது 76-வது குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies