Loading...

செய்திகள்

Feb 01, 2025
News Image

சுதந்திர இந்தியாவின் நூறாவது ஆண்டில் வல்லரசு இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்க வழிவகுக்கும் ஆரம்பரமே 2025 - 26 பட்ஜெட் ஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் வரவேற்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (31.01.2025) தொடங்கிய நிலையில், 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய தியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2025) நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 8-வது முறையாக தாக்கல் செய்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு ரூ. 12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மாத சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பாகும். இது தனிநபர் வருமான உயர்வினை ஊக்குவிக்கின்ற வகையில் அமைந்துள்ளது.  மீன்வளத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது மீன்வளத்துறையும் – மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றும்.  22 லட்சம் நபர்களுக்கு காலணிகள் தயாரிக்கும் துறையில் வேலைவாய்ப்பு விவசாயம்:.  அதிக விளைச்சல் தரும் விதைகளுக்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.  பிரதம மந்திரி தன் தானியா திட்டத்தின் கீழ் வேளாண் திட்டத்தில் 100 மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.  கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கும் அளவு ரூ. 3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை உயர்வு. கல்வி:  பள்ளிகளில் குழந்தைகளிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் அடல் டிங்கெரிங் ஆய்வு மையங்கள் அமைக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுதும் 50 ஆயிரம் ஆய்வு மையங்கள் உருவாக்கப்படும்.  ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இணையத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தப்படும்.  மாணவர்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே டிஜிட்டல் தொழில்நுட்பம் பயிற்றுவிக்கப்படும். மேலும்,  நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்ற 1 லட்சம் கோடி  தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் பிரிவைச்சேர்ந்த மகளிர் முன்னேற்றத்திற்காக சுயதொழில் தொடங்க ரூ. 5 லட்சம் முதல் 2 கோடி வரை கடன் உதவி.  உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றின் விலைகள் குறையும் என்பதோடு, புற்றுநோய் உள்ளிட்ட தீவிரமான நோய்களுக்கான மருந்துகளுக்கான சுங்க வரி குறைக்கப்படும். ஆறு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் புற்றுநோய் தொடர்பான 36 மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும்.  இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் 2028 – ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என்பன உள்ளிட்ட திட்டங்களோடு, சுதந்திர இந்தியாவின் நூறாவது ஆண்டில் வல்லரசு இந்தியா (விக்சிங் பாரத்) என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதை இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்று மகிழ்கின்றோம். அன்புடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News