“மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்” எனும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கவிவரிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாக பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பெண்களின் அபரிமிதமான முன்னேற்றத்தினை நமக்கு கண்முன்னே காட்டும் வளர்ச்சியாகும். இத்தகு சிறப்பு வாய்ந்த மகளிரை பெருமைபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 8- ஆம் நாள் “சர்வதேச மகளிர் தினம்” கொண்டாடப்பட்டு வருகின்றது. பெண்களின் மகத்தான சாதனைகளைக் கொண்டாடும் வகையில், உலக அளவில் இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திடாத காலத்தில் அடுக்களை முதல் பொதுவெளி வரை பெண்கள் பட்ட துயரங்கள் எண்ணற்றவையாகும். இன்று நவீன சாதனங்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை முறை எளிமைப்படுத்தப்பட்டாலும், அதே அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதியான சமூக ஊடகங்கள் மூலம் பெண்கள் மனரீதியாகவும் – உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டு வருவதை நாம் அனைவரும் கண்கூடாக பார்க்கின்றோம். தாயாக – மனைவியாக – தோழியாக – சகோதரியாக – மகளாக என்று நம் உறவின் அனைத்து பரிணாமங்களிலும் நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் பெண்ணினத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உண்டு எனக்கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies