இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து பேச்சு பரந்தூர் புதிய பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம விவசாய மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த பரந்தூர் விமான நிலையம் இடம் மாற்றம் தொடர்பாக 21.12.2023 அன்றே மக்களவையில் அப்போது பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர்.பாரிவேந்தர் அவர்கள் முதன் முதலில் கேள்வி எழுப்பினார். என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் டாக்டர்.ரவிபச்சமுத்து அவர்கள் 958- வது நாளாக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்ற ஏகனாபுரம் மக்களை நேரில் சந்தித்து தனது ஆதரவினைத் தெரிவித்துக் கொண்டார். இவர் மக்களிடையே பேசும் போது, ஐயா பாரிவேந்தர் தான் முதன் முதலில் இதற்கு குரல் எழுப்பினார் என்றும் அதற்கு அப்போதைய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ஜோதிராத்திய சிந்தியா அவர்கள் தெளிவாக பதில் அளித்து இருந்தார் என்றும், இதற்கு முழு பொறுப்பு தமிழ்நாடு அரசு தான் என்றும், அவர்கள் தான் இதற்கு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்றும், அவர்கள் ஒதுக்கி தரும் இடத்தில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமையும் என்றும் தெளிவாக கூறியிருந்தார் என்று இளைவேந்தர் ரவி பச்சமுத்து அவர்கள் தெரிவித்தார். மேலும் நீங்கள் சட்ட போராட்டத்தை கையில் எடுங்கள் என்றும், அதற்கு இந்திய ஜனநாயக கட்சி துணை நிற்கும் என்றும் தனது ஆதரவை தெரிவித்தார். தமிழக அரசு பரந்தூரில் 1005 குடும்பங்கள் வசிக்கின்றனர். இது பன்னூரில் உள்ள 1546 குடும்பங்களுடன் ஒப்பிடும் போது குறைவு என்று சொல்கிறது. இந்திய ஜனநாயகக் கட்சி வலியுறுத்துவது என்னவென்றால் நாங்கள் விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, 3774 ஏக்கர் கொண்ட விளை நிலங்கள் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் அழிக்கப்படாமல், மேலும் அங்கு உள்ள 1000 ஆண்டுகள் பழமையான் சிவன் கோவில் அழிக்கப்படாமல் வேறு பகுதியை தேர்வு செய்து சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம். இங்ஙனம், தலைமை அலுவலகம் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies