இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த மொழிபெயர்ப்புக்காக 21 மொழிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மத்திய அரசின் 2024-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதினை "எனது ஆண்கள்" என்ற நூலின் மூலம் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியிருக்கும் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ப.விமலா அவர்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உங்கள் எழுத்து சாதனை இலக்கிய மொழிப்பெயர்ப்பு உலகிற்கு மிகப்பெரிய பெருமையை சேர்த்திருக்கின்றது. உங்கள் படைப்புகள் மேலும் பலரை தீவிரமாக ஈர்த்து, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், பிற மொழி நூல்களை தமிழ்மொழியில் உருவாக்குகின்ற மொழிப்பெயர்ப்பு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வாழ்த்துகின்றேன். மேலும் தொடர்ச்சியாக சிறந்த மொழிப்பெயர்ப்பு நூல்களைத் தாங்கள் உருவாக்க வேண்டும். தங்களின் கல்வி, எழுத்து மற்றும் மொழிப்பெயர்ப்பு பணிமேலும் சிறக்க இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies