நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவ – மாணவியருக்கும் எனது சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீண்ட நாட்களாக உங்களுடைய செயல்பாடுகள் – முயற்சி – கடின உழைப்பு அனைத்தையும், நாளை நடைபெற இருக்கும் பொதுத்தேர்வில் சிறப்பாக நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், உங்களுடைய லட்சியப்பாதையை தீர்மானிக்கும் வகையில், சிறந்த மதிப்பெண்களைப் பெற்று, வாழ்க்கையின் அடுத்தக்கட்ட நகர்வு சிறப்பாக அமையும் வகையில் இந்த பொதுத்தேர்வு அமைந்து, உங்களின் எதிர்காலக் கனவுகள் நிறைவேற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies