மிகுந்த பெருமையுடன், உழைக்கும் மக்களின் உரிமைகளைப் போற்றும் இந்நாளில் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் அரும்பணியை நினைவு கூர்ந்து, உழைப்பு மட்டுமே வாழ்க்கையின் மெய்யான மதிப்பை உருவாக்குகிறது என்பதை நாம் நன்கு உணர வேண்டும். உழைப்பாளர் தினத்தில், தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு, அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொண்டு, “உழைப்பே உயர்வு” என்பதனை நம்பி, உழைக்கும் அனைவருக்கும் ‘மே தின’ நல்வாழ்த்துகளை எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies