Loading...

செய்திகள்

Apr 13, 2025
News Image

அனைவருக்கும் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் இருக்கும் ஆண்டாக தமிழ்ப்புத்தாண்டு அமையட்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“பிறந்து சிறந்த மொழிகளுக்கிடையே, சிறந்தே பிறந்த மொழி நம் தாய்மொழியாம் தமிழ்மொழி”. உலகிலேயே தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த மொழி நம் தமிழ்மொழி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய முத்த குடி நமது தமிழ்குடி. நம் தமிழ்குடி பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை மாதத்தின் முதல்நாள், தமிழ்ப் புத்தாண்டான இந்நாளில், தமிழரின் பாரம்பரியமும் பண்பாடும் அனைவரிடமும் மலர்ந்து நலங்கள் தழைக்கட்டும். நாளை தொடங்கவுள்ள விஸ்வாவசு ஆண்டில், வலிமையும், வளமும் மிக்க நம் தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்ல அனைவரும் ஒன்றுபட்டு நின்று ஊக்கத்தோடு உழைத்து, புதிய சாதனைகளை படைப்போம் என்றும், வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமுடன் இந்த ஆண்டு அனைவருக்கும் மிகச்சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துகளை எனது சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றேன். ,வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News