Loading...

செய்திகள்

Mar 30, 2025
News Image

ஒற்றுமையும் – சகோதரத்துவமும் செழிக்க நமது நாடு செழித்து வளர - அனைவரும் நல்லுறவுடன் வாழ இறையன்பும் – அருளும் நிலைத்து நிற்கட்டும் - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து ரமலான் வாழ்த்து -

புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் – உள்ளத்தையும் தூய்மைப்படுத்தியும் – எண்ணங்களை ஒருமுகப்படுத்தியும், மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்யும் சேவைக்கு ஒப்பானதாகும். ரமலான் மாதம் அன்பு – ஈகை – கருணை – சமாதானம் ஆகியவற்றின் உன்னத செய்தியை எடுத்துரைப்பதுடன், மனித நேயத்தைப் பரப்பும் புனிதமான காலமாக விளங்குகிறது. இந்நன்னாளில், அமைதி – சகோதரத்துவம் – மனிதநேயத்துடன வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். ஒன்றுமையும் – சகோதரத்துவமும் செழிக்க, நமது நாடு செழித்து வளர அனைவரும் நல்லுறவுடன் வாழ இறையன்பும் – அருளும் நிலைத்து நிற்கட்டும் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், எனது உளம் கனிந்த ரமலான் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News