Loading...

செய்திகள்

Apr 24, 2025
News Image

“அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது மிக முக்கியம்” IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் சர்வதேச பெண்கள் அரசியல் அதிகாரமளிப்பு தின வாழ்த்து

உலகெங்கிலும் உள்ள சமூக-அரசியல் களத்திலிருந்து பெண்கள் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர். முக்கியமாக அரசியல் விவகாரங்களின் தலைமைப் பொறுப்பில் அவர்கள் வரவேற்கப்படவில்லை. பல்வேறுபட்ட பரினாமங்களில் பெண்களின் வாழ்க்கை முழுவதும் குடும்பங்களைச் சார்ந்தே இருந்தது. மாறிவரும் காலங்களுடன், தற்போதைய சூழலில் அரசியல் துறையில் அதிகமான பெண்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கு முக்கிய நிறுவன பதவிகளை ஒதுக்கும் அரசாங்கக் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றது. நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் தங்கள் பங்கை வகிக்கும் முழு மன உறுதியின் காரணமாக அரசியலில் வெற்றிபெற்று வருவதை நாம் கண்கூடாக காண்கிறோம். அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது மிக முக்கியம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி, பெண்கள் அரசியல் அதிகாரமளிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. அரசியல் துறையில் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், அரசியலில் பெண்கள் ஈடுபடுவதற்கும் ஒரு தனி நாளைக் குறிப்பது அவர்களுக்கு தூண்டுகோளாக அமையும்.. குறிப்பாக வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் அடிப்படை மனித உரிமைகளை அடைவதற்கு அவர்களின் பங்கேற்பும் அரசியல் தலைமையும் மிக முக்கியமானதாக இருக்கும் எனக்கூறி, தற்போது அரசியலில் கோலோச்சும் அனைத்து பெண்களுக்கும் – நாளை அரசியலில் கால்பதித்து வெற்றிபெறவுள்ள அனைத்து மகளிருக்கும், இந்த சர்வதேச பெண்கள் அரசியல் அதிகாரமளிப்பு தினத்தில் வாழ்த்தி மகிழ்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News