Loading...

செய்திகள்

Apr 09, 2025
News Image

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த, இலக்கியச்செல்வரும் - முதுபெரும் தலைவருமான அய்யா குமரிஅனந்தன் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல் -

காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக பல்வேறு பொறுப்புகளை மிகச்சிறப்பாகவும், நிதானமாகவும், நம்பிக்கையுடனும் செயல்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க தலைவராக விளங்கிய குமரி அனந்தன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். மக்களோடு மக்களாக இருந்து, தனது பண்பால் குணத்தால் மக்களின் மனதில் தனி இடம் பிடித்தவர் அய்யா குமரிஅனந்தன் அவர்கள். மேலும் நாடாளுமன்றத்தில் தமிழ்மொழியில் உரையாற்றும் உரிமையைப் பெற்று கொடுத்தவர் அய்யா குமரிஅனந்தன் அவர்கள். நாடாளுமன்ற வரலாற்றில் இவர் ஆற்றிய அரும்பணிகள் என்றென்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். நாடறிந்த நல்ல தமிழ்பேச்சாளர், மிகச்சிறந்த எழுத்தாளர், தமிழ் இலக்கிய வித்தகர், சீரிய சிந்தனையாளர் என பன்முகம் கொண்ட அய்யா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அன்பான பாசமிகு தந்தையை இழந்து வாடும் அன்புச்சகோதரி மருத்துவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வருத்தங்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News