எளிமையும் – ஆழ்ந்த நம்பிக்கையும் – எல்லையற்ற கருணையும் – சமூக நீதிக்காகவும் ஏழைகளை மேம்படுத்துவதற்காகவும் பிரச்சனை நிறைந்த உலகில் அமைதிக்காக அழைப்பு விடுப்பதற்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் திரு.போப் பிரான்சிஸ் அவர்கள். மதம் கடநது – மனிதம் பேசிய கருணைக்கடல் மற்றும் நம்பிக்கையின் ஒளிவிளக்கு மறைந்த செய்தியறிந்து சொல்லெனா வருத்தமும் வேதனையும் அடைந்தேன். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் – சுற்றுச்சூழல் மீதான அவரது அக்கறையும் – மனித கடத்தலுக்கு எதிரான அவரது முயற்சிகளும் என்னென்றும் குறிப்பிடத்தக்கவை ஆகும். உலகம் முழுவதும் அவரை நேசித்த கோடிக்கணக்கான ஆதரவாளர்களுக்கும் - அனைத்து கிறித்துவ நண்பர்களுக்கும் என் சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொண்டு – அன்னாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies