நேற்று (22.4.25) காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், 2 வெளிநாட்டவர் உட்பட 28 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டும் – 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்தனர் என்ற செய்தியறிந்ததும் சொல்லொனா துயருற்றேன். கோடை விடுமுறையை இயற்கையுடன் மகிழ்ச்சியாக அனுபவிக்க குடும்பத்துடன் வந்திருந்த அப்பாவி சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்று தனது தீவிரவாத மிருகசெயல்களை வெளிப்படுத்தும் பயங்கரவாத போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் எந்த மூலையில் – எந்த ரூபத்தில் தீவிரவாதம் தலைதூக்கினாலும் அதை அடியோடு வேரருக்கவேண்டும் என்பதில் வேறு கருத்துக்கு இடமில்லை., இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுவது இதுவே இறுதியாக இருக்கவேண்டும். நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டின் பாதுகாப்பில் அரசு மேலும் முனைப்புடன் செயல்பட்டு, தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் எனக்கூறி, தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, படுகாயமடைந்த அனைவரும் பூரணநலம் பெற்று அவரவர் இல்லம் திரும்பவேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம். வருத்தங்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies