கோவை – திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி 13 நாட்களுக்கும் மேலாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட 15 சதவீத கூலி உயர்வு தங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனவும், அதை வழங்கக் கோரியும் - சட்ட பாதுகாப்புடன் கூடிய புதிய கூலி உயர்வு ஒப்பந்தம், ஆண்டுக்கு 6 சதவீத மின்கட்டண உயர்வை ரத்துசெய்வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராடிவருகின்றனர். மின்கட்டண உயர்வு – வாடகை – உதிரி பாகங்கள் விலை உயர்வு – தொழிலாளர்கள் கூலி உயர்வு - தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விசைத்தறி தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பதினைந்து மாதங்களாக கூலி உயர்வு கோரி பத்துமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், சுமூகமான முடிவு எட்டாததால் கோவை – திருப்பூர் மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 1.25 லட்சம் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி தொழிலை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றவும், கோவை – திருப்பூரில் ஆரம்பகாலம் முதற்கொண்டு நடந்துவரும் இந்த தொழில் நலிவடையாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு, விசைத்தறியாளர்களின் நிலைமையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன். . , அன்புடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies