Loading...

செய்திகள்

May 31, 2025
News Image

சமூக நீதி, கல்வி மேம்பாடு, மற்றும் சமத்துவம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியவர் நீதிக்கட்சியின் வைரத்தூண் சர் ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்கள். இவரது பிறந்தநாளில் இவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து பின்பற்றுவோம்.. IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் அறிக்கை

சர். ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள், தமிழ் – தமிழர் - தமிழ்நாட்டின் நலனுக்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டவர். 40 பள்ளிகள் மட்டுமே இருந்த தஞ்சை மாவட்டத்தில் 170 பள்ளிகளாக அக்காலத்தில் உயர்த்தியவர் சர். ஏ. டி. பன்னீர்செல்வம் அவர்கள். மேலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணிகளையும், செயல்பாட்டையும் நன்கறிந்த பன்னீர்செல்வம் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராக தந்தை பெரியார் அவர்களைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று முழங்கியவர். சாதிக் கொடுமையைப் போக்க தந்தை பெரியாருக்குத் துணையாக இருந்த தளபதிகளில் முதன்மையானவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுகளில் இந்தியாவின் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மற்றும் தனித்தொகுதி கோரிக்கைகளை வலியுறுத்தியவர். நீதிக்கட்சியின் வைரத்தூணாக விளங்கியவர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள். நாம் அனைவரும் அவரது பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளை நினைவு கூர்ந்து அவரது சிந்தனைகளை கடைபிடிப்போம் எனக்கூறி, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வாழ்த்தி மகிழ்கின்றேன். ,  வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News