கடந்த 2013 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட தேசிய உணவு பாதுகாப்பு சட்ட்த்தின் மூலம் உணவு ஓர் அடிப்படை மனித உரிமையாக உறுதிசெய்யப்பட்டது. இதனை ஏற்று புதுடெல்லி – அரியானா – இமாச்சலபிரதேசம் – ராஜஸ்தான் – கர்நாடகம் – பஞ்சாப் – சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளபோதும் – தமிழக அரசு இச்சட்டத்தின் மீது கவனம் செலுத்தாதது ஏன் என புரிந்துகொள்ளமுடியவில்லை.
இச்சட்டம் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டால் கிராமபுறங்களில் ஏறக்குறை 75 சதவீதத்தினரும், நகர்புறத்திலுள்ள 50 சதவீதத்தினருக்கும் தடையில்லாமல் உணவு கிடைக்க வாய்ப்புள்ளது. இச்சட்டத்தினால் ஆதரவற்றோர் – இயற்கை பேரழிற்கு ஆளானோர் – பட்டினியால் வாடுவோர் என நலிந்த பிரிவினர் நேரிடையாக பயனடைவார்கள். அத்துடன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளோர்களுக்கும் உணவு கிடைக்க இச்சட்டம் வழிவகுக்கும்.
உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உணவு தானியங்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கவும் – பதப்படுத்தி வைக்கவும் வழிவகுப்புதுடன், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு உணவு தானிய உற்பத்தி குறைந்தாலும் அனைவருக்கும் தடையில்லாமல் உணவளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு இச்சட்டத்தினை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்
Powered by iPOT Technologies