கடந்த 2014-ம் ஆண்டு தமிழக பாஜக-வின் தலைவராக பொறுப்பேற்றது முதல், திறம்பட செயலாற்றிவருவதுடன், தமிழக பாஜக-வின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையையும் தாங்கி பணியாற்றிவரும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், தற்போது இரண்டாவது முறையாக தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் மாற்று அரசியல் மலர இவரின் தலைமை நல்லதொரு வாய்ப்பாக அமையும் என கருதலாம்.
டாக்டர் தமிழிசை அவர்களின் அரசியல் பணி செழித்தோங்கி மேன்மேலும் சிறக்க என் சார்பாகவும்,இந்திய ஜனநாயக கட்சியின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Powered by iPOT Technologies