நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் இந்திய ஜனநாயகக் கட்சியினரிடம் இருந்து கடந்த 1-ம் தேதி முதல் விருப்பமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.
அனைத்து தொகுதிகளுக்கும் விருப்பமனுக்கள் பெருமளவில் பெறப்பட்டுவரும் நிலையில், கட்சியின் பல்வேறு அமைப்பினரும் விருப்பமனு தர ஏதுவாக காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாவட்ட அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
அதனை ஏற்று, விருப்ப மனுக்களை வழங்குவதற்கான கடைசி தேதி இம்மாதம் 15-ம் தேதி திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே சென்னை அசோக்நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் திங்கட்கிழமைக்குள் மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Powered by iPOT Technologies