தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் – மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வகை செய்யும் சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை இந்திய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கின்றது.
இதன் மூலம் அவர்களுக்கும் பிற வகுப்பினரை போன்ற கல்வி – வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதேபோல், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வரும் இருளர் – குரும்பர் இனத்தவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies