Loading...

செய்திகள்

Jul 15, 2016
News Image

ஐ.ஜே.கே சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து - மரியாதை

கல்வியே தேசத்தின் கண்களை திறக்கும் வலிமையான ஆயுதம் என்று கூறி பட்டிதொட்டிகளெல்லாம் பள்ளிக்கூட்டங்களை திறந்து – ஏழ்மையான குழந்தைகள் பள்ளிக்கு வரவேண்டும் என்பதால் மதிய உணவு திட்டத்தினை அறிமுகம் செய்து – தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் நல்லாட்சியை தந்து, இறந்தும் – இறவா புகழோடு இருக்கும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரின் திருவுருவ சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பி. ஜெயசீலன் அவர்கள் தலைமையில்  மாலை அணிவித்து  மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், கொள்கைப்பரப்புச் செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன், வர்த்தகர் அணி செயலாளர் கே.சி.டி. மனோகரன், துணைப்பொதுச்செயலாளர் நெல்லை ஜீவா, தேர்தல் பணிக்குழு செயலாளர் எஸ். ஆரோக்கியம் வழக்கறிஞரணி துணை செயலாளர் கே.ஆர். பாலாஜி உள்ளிட்ட கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

 

Back to News