Loading...

செய்திகள்

Aug 15, 2016
News Image

IJK – ன் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

70-ம் ஆண்டு சுதந்திர திருநாள் கொடியேற்று விழா IJK தலைமை அலுவலகத்தில் இன்று (15.08.2016) நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றினார். அதில் சுதந்திரத்திற்காக போராடி வீரமணமடைந்த தில்லையாடி வள்ளியம்மைக்கு SRM பல்கலைக்கழகத்தின் சார்பில் தென்னாப்பிரிக்காவில் சிலை அமைக்கப்படும் என்று கூறினார்.

இந்த விழாவில் பொதுச்செயலாளர் பி. ஜெயசீலன், முதன்மை அமைப்புச்செயலாளர் எஸ்.எஸ். வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ். ராஜேந்திரன், செய்திதொடர்பாளர் வழக்கறிஞர் வே. பாலு, வர்த்தகரணி செயலாளர் KCT. மனோகரன், பாமுச துணை தலைவர் ம. சுந்ததராசு, இளைஞரணி துணை செயலாளர் பி. மதிவாணன், வேந்தர் பேரவை செயலாளர்டி. மோகன்குமார், மாணவரணி செயலாளர் குருபிரசாந்த், வேந்தர் பேரவை துணை செயலாளர் பரத், இளைஞரணி துணை செயலாளர் தனசேகர், விழுப்புரம் மண்டல இளைஞரணி துணை செயலாளர் கோகுல், காஞ்சிபுரம் (தெ) மாவட்ட தலைவர் எஸ். முத்தமிழ்செல்வன், திருவள்ளூர் (கி) மாவட்ட தலைவர் முத்து, காஞ்சிபுரம் (வ) மாவட்ட செயலாளர் ராஜா, தென்சென்னை மாவட்ட செயலாளர் பிரபாகர், திருவள்ளூர் மாவட்ட பா.மு.ச தலைவர் சண்முகம், சென்னை (மே) மாவட்ட தலைவர் முகமது அனிபா, மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் சி. தங்கவேல், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கண்ணன், விழுப்புரம் (கி) மாவட்ட செயலாளர் ரஞ்சித், மாவட்ட மகளிரணி செயலாளர்கள் C.H. சத்தியவதி, A.B. லதா, உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இச்சுதந்திர தினவிழாவில் கலந்துகொண்டனர்.

Back to News