ஒவ்வொரு மனிதர்களுக்கும் இன்றியமையாத கல்வி – செல்வம் – வீரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக விளங்கும் சரஸ்வதி – லட்சுமி – பார்வதி எனும் முப்பெரும் தேவியர்களை,தூய்மையான உள்ளத்துடனும் – பக்தியுடனும் போற்றி வழிபடும் விழா நவராத்தியாகவும் தசராவாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மனிதவள மேம்பாட்டிற்கும் – சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கல்வி. அந்த கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை போற்றியும்,நாம் செய்யும் தொழில்கள் நம்மை வாழவைக்கும் என்பதற்காக செல்வத்தின் அதிபதியான லட்சுமியை போற்றியும், கெட்டவற்றை நல்லவை வெற்றி கொள்ளும் எனும் தத்துவத்தினை விளக்கும் வீரத்தின் அதிபதியான பார்வதியை போற்றியும், இத்திருவிழாக்கள் நாடு முழுவதும் நவராத்திரியாகவும் – தசராவாகவும் கொண்டாடப்படுகின்றன.
இந்நாளில், அதர்மம் எனும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து, தர்மம் தழைத்தோங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறி, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த சரஸ்வதி, ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies