புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் – உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி – எண்ணங்களை ஒருமுகப்படுத்தி - மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவுவது இறைவணக்கத்திற்கு நிகரானதாகும்.
அவ்வகையில், அண்ணல் நபிகள் நாயகம் உலக மக்களுக்கு போதித்த அன்பு – மனிதநேயம் – அமைதி – சமாதானம் – நல்லொழுக்கம் – பிறருக்கு உதவும் மாண்பு ஆகிய உயரிய நெறிமுறைகளை அனைவரும் ஏற்று – அதனை முழுமையாக கடைபிடித்து வாழ வேண்டும் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies