பிறவியிலேயே ஞானம் மிகுந்தும், தன்னை பின்பற்றிய மக்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் மற்றும் துன்பங்களிலிருந்து அவர்களை மீட்டெடுத்தும், தான் வாழ்ந்த காலத்தில்பல்வேறு அதிசயங்களை அரங்கேற்றியவராகவும் விளங்கியவர் இயேசுபிரான் அவர்கள்.
மனித வாழ்வில் நம்பிக்கை என்ற சக்தி வந்துவிட்டால் உலகில் முடியாதது என்றுஎதுவும் இல்லை என்பதனை அனைவரும் உணர ஆன்மீக ஒளியேற்றவர் அவர். இந்த உலகம்அமைதிபெற வேண்டும் என அவதரித்த இயேசுபிரானின், பிறந்த நாளான இந்த நன்னாளில்வாழ்வில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும், நம்பிக்கையுடன் எதிர்கொண்டு – வாழ்வில்வெற்றிபெரும் வரை தொடாந்து போராட வேண்டும் எனக் கூறி, உலகெங்கும் வாழும்கிறிஸ்துவ சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ்நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies