இந்திய ஜனநாயகக் கட்சியின் நெல்லை மண்டலத்திற்குட்பட்ட ஒன்றிய- நகர பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை (27.09.2018) திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள ஹோட்டல் அஃப்னாபார்க்-ல் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கலந்துகொள்ள திருநெல்வேலி– தூத்துக்குடி–கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஒன்றிய–நகர–பேரூர் நிர்வாகிகளுக்கு அழைப்புஅனுப்பப்பட்டுள்ளது.
அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களை கூறவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Powered by iPOT Technologies