Loading...

செய்திகள்

Nov 14, 2018
News Image

நாளை புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

இந்திய ஜனநாயகக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில், நாளை (15.11.2018) காலை 11.00 மணிக்கு, மாவட்டத் தலைவர் K.P.N.சீனுவாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

Ø  காவிரி – வைகை - குண்டாறு இணைப்பதற்கு  மத்திய மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கக்கோரியும்,

Ø  திருச்சி – புதுகை, களமாவூர் இரயில்வே மேம்பாலத்தை உடனே பயன்பாட்டிற்கு கொண்டுவரவும்,

Ø  வரலாறு காணாத பெட்ரோல், டீசல், விலை உயர்வை GST- க்குள் கொண்டுவரவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்துசெய்யக் கோரியம்,

Ø  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உடனே வழங்கவேண்டும் 

Ø  நெல்லுக்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூபாய் இரண்டாயிரம் வழங்கவேண்டும்

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், போராட்டக்குழு செயலாளர் எஸ்.சிமியோன் சேவியர்ராஜ், உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் –பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும்– கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

 

Back to News