புனித ரமலான் மாதத்தில் நோன்பிருந்து உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், மனிதநேயத்துடன் ஏழை எளிய மக்களுக்கு பொருள் உதவி செய்யவேண்டும் எனவும் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் எடுத்துரைத்தார். அவர் இவ்வுலகிற்கு உணர்த்திய அனைத்து நன்னெறிகளையும் மத பேதமின்றி அனைவரும் கடைபிடித்தால் உலகில் ஒற்றுமை தழைத்தோங்கியும், வன்முறைகள் ஒடுங்கியும் நாடு வளம் பெறும்.
ரமலான் திருநாளான இந்நாளில் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் இந்த தூய வசனங்களை நினைவில் கொள்ளவேண்டும் எனக்கூறி, அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies