நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில்,சந்திராயன் – 2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான “இஸ்ரோ”வடிவமைத்து, இன்று (22.07.2019) மதியம் சரியாக 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்தின்ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ள சந்திராயன்-2 விண்கலம், இந்திய விஞ்ஞானிகளின் அயராத உழைப்பிற்கும், அறிவாற்றலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.
விண்வெளி அறிவியலில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா பயணிக்கின்றது என்பதற்கு இது ஒரு சான்றாகும். இச்சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டிய ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கள்கின்றேன்.
Powered by iPOT Technologies