Loading...

செய்திகள்

Aug 15, 2019
News Image

IJK தலைமை அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றிவைத்து சுதந்திரதின திருநாள் கொண்டாட்டம்

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்தில், இந்தியாவின் 73-வது சுதந்திரதின திருநாள் கொண்டாடப்பட்டது. கட்சியின் முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.S.S. வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் திரு.M.S. ராஜேந்திரன்  ஆகியோர் கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் தென்சென்னை மாவட்டத்  தலைவர் திரு. நெல்லை V.சண்முகம், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் திரு. S. ராஜா, தொழிற்சங்க பேரவைச் செயலாளர் திரு.S.சேவியர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணிச் செயலாளர்கள் திருமதி C.H.சத்தியவதி, D.உஷா, Y.துர்கா, T.கவிதா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்சியின் நிர்வாகிகளும் - தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

Back to News