இந்திய ஆட்சிப்பணியில் தேர்வுபெற்ற திரு.டி.என்.சேஷன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவராகவும், மாநில – மத்திய அரசு துறைகளின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர், ஆளுமைமிக்க இந்திய தேர்தல் ஆணையாளராக 1990-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அதுவரை இந்திய தேர்தல் ஆணையம் என்பது, மத்திய – மாநில அரசுகளின் அறிவுரைப்படி தேர்தல்களை நடத்தும் சம்பிரதாயமான ஒரு அமைப்பாக மட்டுமே இருந்துள்ளது. திரு.டி.என்.சேஷன் அவர்கள் ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர்தான் அதன் முழு அதிகாரமும் பயன்படுத்தப்பட்டது.
தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்திற்கான காலவரையறை, விளம்பரங்களில் கட்டுப்பாடு போன்றவற்றை கடுமையாக செயல்படுத்தினார். இதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் என்கிற பெருமை திரு.டி.என்.சேஷன் அவர்களையே சேரும் எனக் கூறலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த திரு.டி.என்.சேஷன் அவர்களின் மறைவிற்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் குடும்பத்தினருக்கும் என் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Powered by iPOT Technologies