Loading...

செய்திகள்

Feb 26, 2021
News Image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். மாணவப் பருவத்திலிருந்தே பொதுவுடமை கட்சியின் பால் ஈடுபாடு கொண்டவர் திரு.தா.பாண்டியன் அவர்கள். அரசியல் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் சிறந்து விளங்கினார். சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் விளங்கிய திரு.தா.பாண்டியன் அவர்களின் மறைவிற்கு மீண்டும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Back to News