Loading...

செய்திகள்

Aug 18, 2021
News Image

தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன்அவர்களின்தாயார் திருமதி கிருஷ்ணகுமாரி அவர்களின்மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் - டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான  தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தாயாரும், தமிழ் அறிஞரும், - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு. குமரி அனந்தன் அவர்களின் மனைவியுமான திருமதி கிருஷ்ணகுமாரி அவர்கள், இன்று (18.08.2021) வயது மூப்பு காரணமாக காலமானார் என்கிற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புத் தாயாரை இழந்து வாடும் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன்  அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,  அவரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

வருத்தங்களுடன்,

டாக்டர் பாரிவேந்தர், M.P,

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.

Back to News