Loading...

செய்திகள்

Aug 20, 2021
News Image

IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தி

"கேரளாவை ஆட்சி செய்த மாபலி சக்கரவர்த்தி மன்னன், கிருஷ்ண பகவானிடம், தான் திருவோண நாள் அன்று கேரள மாநிலத்திற்கு வருகை தருகின்ற வரத்தை விரும்பிப் பெற்றார். அந்த மாமன்னர் தன்னுடைய மக்களை சந்திக்க வருகின்ற நாளே திருவோண நாளாக கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

'மத வேறுபாடுகள் ஆங்காங்கே வேரூன்றி மக்களை பிளவுபடுத்தி கொண்டிருக்கும் நேரத்தில், இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும் போது மதநல்லிணக்கம் வலுப்படும். இந்த இனிய நாளில் தமிழகத்திலும், கேரளத்திலும் மற்றும் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர - சகோதரிகளுக்கு, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

வாழ்த்துக்களுடன்,

ரவிபச்சமுத்து

தலைவர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News