Loading...

செய்திகள்

Oct 01, 2021
News Image

இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் முன்னுதாரணமான தலைவர் ‘மகாத்மா காந்தி’ - டாக்டர் பாரிவேந்தர் M.P. அவர்கள் காந்தி ஜெயந்தி வாழ்த்து -

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் தேதி நமது நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மகாத்மா காந்தி நினைவு கூறப்படுகிறார்.

சுதந்திர இந்தியாவின் “தேசபிதா” என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார்.  ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரமடையச் செய்ததில் இவரின் பங்கு அளப்பரியதாகும்

இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் முன்னுதாரணமான தலைவராக திகழ்ந்தவர் மகாத்மா அவர்கள். அவர்  தன் வாழ்வில் சத்தியம் - நேர்மை - அகிம்சை ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டியவர். இம்மகான் பிறந்த நாளில் என்றும், அவரின் புகழைக் கொண்டாடுவோம் என வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்த்துக்களுடன்,

டாக்டர் பாரிவேந்தர் M.P

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

 

Back to News