Loading...

செய்திகள்

Nov 20, 2021
News Image

வ.உ.சிதம்பரனாரின் நூல்கள் மலிவு விலைப்பதிப்பாக வெளிவர இருக்கிறது - டாக்டர் பாரிவேந்தர் M.P வரவேற்பு

வ.உ.சிதம்பரனார் எழுத்துக்கள் வ.உ.சி நூல் களஞ்சியமாகத் தொகுக்கப்பட்டு, அவரது 150–ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.

முதல் கட்டமாக வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, ‘வ.உ.சி பன்னூல் திரட்டு’ எனும் தலைப்பிலும், இரண்டாம் தொகுதி ‘வ.உ.சி திருக்குறள் உரை’ எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.

விடுதலைப் போராட்ட  வீரர் தமிழறிஞர் வ.உ.சி-யின் எழுத்துக்கள், சிந்தனைகள் இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டும். தமிழக அரசின் இந்த முயற்சிகளைப் பாராட்டுகின்றேன்.

அன்புடன்

டாக்டர் பாரிவேந்தர் M.P

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News