Loading...

செய்திகள்

Jun 22, 2022
News Image

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி.

இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,  இன்று (22.06.2022) காலை 11.00 மணிக்கு, கட்சியின் தலைவர்  டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும்.

பெட்ரோல் – டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய – மாநில அரசுகள் உடனடியாக குறைக்க வேண்டும்.

சுரண்டல் லாட்டரியை தடை செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான திரு.ஜி.ராஜன், மாநில துணை பொதுச்செயலாளர் திரு.எம்.ரவிபாபு, செய்தி தொடர்பாளர் திரு.பிரவீன் காந்த், IJK மக்கள் தொடர்பு அலுவலரும் - சென்னை மண்டல மகளிரணி தலைவி திருமதி A.B.லதா, பா.மு.ச துணைத்தலைவர் திருமதி.இளவரசி, மாநில வழக்கறிஞரணி செயலாளர் திரு.K.R.பாலாஜி, மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்டத் தலைவர்கள், இளைஞரணி – மகளிரணி   உள்ளிட்ட  600-க்கும் மேற்பட்ட மாநில – மண்டல - மாவட்ட நிர்வாகிகள் பலருடன் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக  நடந்து முடிந்தது.

இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் – திருச்சி – செங்கல்பட்டு - தஞ்சாவூர் – சேலம் – கள்ளக்குறிச்சி – வேலூர் – திருப்பத்தூர் – கோவை - திண்டுக்கல் – குளித்தலை – சிவகங்கை – மதுரை – தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இங்ஙனம்,

கட்சித் தலைமையகம்

இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)

 

 

 

Back to News