Loading...

செய்திகள்

Aug 30, 2022
News Image

IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் - விநாயகர் சதுர்த்தி திருநாள் வாழ்த்துச்செய்தி.

‘ஐந்து கரத்தான்’ என்று அழைக்கப்படும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்கிறது.

 வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வேழ முகத்தோனை இந்த விநாயகர் சதுர்த்தி திருநாளில் மக்கள் அனைவரும் வழிபட்டால், அவர்தம் கருணையால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகி வாழ்வில் அனைத்து வளமும் பெற்று வாழ விநாயகப் பெருமான் அருள்புரிவார் என்பது  நம் அனைவரின் நம்பிக்கையாகும். 

இந்த நாளில், ‘வீடெங்கும் அன்பும், மகிழ்ச்சியும் நிறையட்டும், நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும்’  எனக்கூறி,  இந்திய ஜனநாயகக் கட்சியின்  சார்பில் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

வாழ்த்துக்களுடன்,

டாக்டர் ரவிபச்சமுத்து

தலைவர்

இந்திய ஜனநாயகக் கட்சி (IJK).

 

Back to News