Loading...

செய்திகள்

Oct 10, 2022
News Image

உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாரி கட்சியின் மூத்த தலைவருமான திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவுக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் இரங்கல்

உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் – சமாஜ்வாரி கட்சியின் மூத்த தலைவருமான திரு. முலாயம்சிங் யாதவ் அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரு.ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தவர். மூன்று முறை உத்திரபிரதேசத்தின் முதலமைச்சராக பதவி வகித்து திறம்பட பணியாற்றியவர்.

திரு.முலாயம்சிங் யாதவ் அவர்களின் மறைவால் அவரை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்கும் – நண்பர்களுக்கும் – அரசியல் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

 

வருத்தங்களுடன்,

டாக்டர் பாரிவேந்தர் M.P

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி

 

Back to News